Tuesday 25 June 2013

சிந்தனைத் துளிகளில் சில

சிந்தனைத் துளிகளில் சில

செல்வத்தை வைத்துச் சென்றதகப்பனை விடத் தொழில் கற்ப்பித்துச் சென்ற தகப்பனே தன் மக்களூக்கு மிகுந்த பாதுகாப்பு அளித்தவன்.

 

உழைத்து சம்பாதித்த பொருளுக்கு எப்போதுமே மதிப்பு மிகுதி.

அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்கமுடியாது.
மூன்று முறை முகத்தில் அடித்தால்புத்தருக்கும் கோபம் வந்தே தீரும்.

முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்!முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்!முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய்!முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய்!உனக்கு எல்லா வழிகளிலும் நன்மை வந்து சேரும்!.

பிறரை பாரட்டுங்கள்  - பாரட்டு கிடைக்கும்பிறரை  மதியுங்கள்    - மதிப்பு கிடைக்கும்பிறருக்கு அன்பு செலுத்துங்கள் - அன்பு தேடி வரும்இவை ஒரு வழிப்பாதைகள் அல்ல இரு வழி பாதைகள்
அன்பினில் வணிகத்திற்க்கு இடமில்லை.வணிகத்தில் அன்பிற்க்கு  இடமில்லை.
நன்றி

No comments:

Post a Comment