Wednesday 3 June 2015

சந்ததிக்காக..... இதை செய்யுங்க!

சந்ததிக்காக..... இதை செய்யுங்க!

இதிகாசங்களும்சாஸ்திரங்களும் மனித வாழ்வை செம்மைப்படுத்தபல நல்ல வழிகளை சொல்லிவழி காட்டுகின்றன. அவற்றின்படி நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோஅதன்படி நடந்தவர்கள்நன்மையே அடைந்துள்ளனர் என்பதைநாம் தெரிந்து கொள்வதன் மூலம்நம் வாழ்வை நெறிபடுத்திக் கொள்ளலாம். 

காசியில்தர்மபாலன் என்ற அந்தணர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல,நற்குணங்கள்நிறைந்தவர். அவரது மகன் தட்சசீலத்தில் இருந்த ஒரு வித்யாலயாவில்கல்வி கற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம்குருகுலத்தில்,குருவின் மகன்சிறு வயதிலேயே இறந்து விட்டான்.

அதுகுறித்துமாணவர்கள் வருந்திப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது,எங்கள் வம்சத்தில் இப்படி யாரும் சிறு வயதில் இறந்ததில்லை... என்றான் தர்மபாலனுடைய மகன். இந்த விஷயத்தைமாணவர்கள்குருவிடம் சொல்ல,அவர்அவனை அழைத்து விவரம் கேட்டார். அதற்கு அவன்எங்கள் பரம்பரையில்ஏழு தலைமுறைகளாக அனைவருமே முதுமையடைந்து தான் இறந்திருக்கின்றனர். சிறு வயதில் யாருமே இறந்ததில்லை... என்றான். அது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்த குருஇதன் உண்மையை அறிந்து கொள்வதற்காகஆட்டு எலும்புகளை ஒரு பையில் சேகரித்துகாசியில் இருக்கும் தர்மபாலனின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தர்மபாலனிடம்உங்கள் பையன் திடீரென இறந்து விட்டான். இதோ பாருங்கள் அவன் எலும்புகள்... என்று சொல்லிஆட்டு எலும்புகளை காட்டினார். இதைக் கேட்ட தர்மபாலன் சிறிதும் கலங்காமல்சிரித்தபடியே,இவை என் பையனின் எலும்புகளாக இருக்க முடியாதுஅவன் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டான். காரணம்எங்கள் பரம்பரையில்ஏழு தலைமுறைகளாக யாருமேசிறு வயதில் இறந்தது கிடையாது... என்றார். 

குருநாதர்ஆச்சர்யம் அடைந்துஉண்மையை சொல்லிஉங்கள் பிள்ளையும் இதையே தான் கூறினான். இது எப்படி சாத்தியம்எனக் கேட்டார். 

தர்மபாலன் சொன்னார்: இதில்வியப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறோம்தீயவர்களுடன் சேர்வது இல்லைநல்லவர்களைப் பிரிப்பது இல்லை. பொய் சொல்ல மாட்டோம்துறவிகள்அந்தணர்கள் மற்றும் ஏழைகள்பிச்சை கேட்போர்யாத்திரிகர்கள் ஆகியோருக்கெல்லாம்,முழு மனதோடுஇனிமையாக பேசிஉணவு அளிக்கிறோம். நாங்கள் செய்யும் இத்தகைய நன்மைகள் தான்எங்களை வாழ வைக்கின்றன. அதன் காரணமாகவேஎங்கள் பரம்பரையில் யாரும்சிறு வயதில் இறப்பதில்லை. - இவ்வாறு அவர் கூறினார். 

உண்மையை உணர்ந்த குருதன் செயலை எண்ணி வருந்தியபடிஊர் திரும்பினார் என்பது கதை. நமக்காக இல்லாவிட்டாலும்நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவதுமுடிந்தவரைநல்லதை செய்ய முயற்சிப்போம்

நன்றி                  

No comments:

Post a Comment